சிங்கப்பூர் செய்திகள்

திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிட பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் தற்போது புதிய முனைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிட பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன இந்த வருடத்தின் இறுதிக்குள் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் திருச்சி சர்வதேச விமான நிலையம் அதிக விமானம் மற்றும் பயணிகள் போக்குவரத்தில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மலேசியா ஸ்ரீலங்கா துபாய் போன்ற நாடுகளுக்கு சர்வதேச விமானங்களும் இந்தியாவிற்குள் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச தரத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வருடத்திற்கு இறுதிக்குள் இந்த புதிய விமான நிலைய முனைய கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும் என விமான பயணிகள் எதிர்பார்க்கின்றனர் .

Related Posts