சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர்:திங்கட்கிழமை, 1 ஆகஸ்ட் 2022, அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ திரௌபதை அம்மன் கொடியேற்றம்.

ஸ்ரீ திரௌபதை அம்மன் பால்குட அபிஷேகத்தில் காலை 10 மணிக்கு பக்தர்கள் கலந்துகொள்ளலாம். பால்குட சீட்டுகளை கோயில் அலுவலகம் அல்லது இணையத் தளத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

கோயில் தயாரித்துள்ள பால்குடங்களை மட்டுமே பக்தர்கள் காணிக்கையாக செலுத்த முடியும். பால்குடம் எடுக்கும் பக்தர்கள் தங்களது நேற்றிக்கடனை செலுத்த கோயில் வளாகத்தை ஒருமுறை மட்டும் சுற்றி வரலாம்.

அன்று மாலை அர்ச்சனைகள் அல்லது முன்பதிவு செய்யப்பட்ட வழிபாட்டுச் சேவைகள் இடம்பெறாது.

கோயில் வளாகத்திலிருந்து பக்தர்கள் சிறப்பு வழிபாட்டு பூஜைகளை பார்வையிடலாம்:

மாலை 5:05 மணி: ஸ்ரீ மாரியம்மன் திரௌபதை கரகம் தயாரித்தல், கோயிலுக்குள் ஸ்ரீ திரௌபதை அம்மன் கரக ஊர்வலம்.

மாலை 6:00 மணி: ஆலய பூஜை

மாலை 6:45 மணி: விக்னேஸ்வர பூஜை புண்ணிய வஜனம் வாஸ்து சாந்திஹோமம். மாலை 7:45 மணி: ஸ்ரீ திரௌபதை முதலிய சன்னதிகளின் பூஜை

இரவு 8:30மணி: அம்மன் ஊர்வலம்

இரவு 9:15 மணி: ஸ்ரீ திரௌபதை அம்மன் கொடியேற்றம்

இரவு 9:45 மணி: மகாபாரத வாசித்தல்

இரவு 10:00 மணி: பிரசாதம் விநியோகம்

கோயில் வளாகத்தில் பக்தர்கள் எந்நேரமும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

பூஜைகளின் நேரலையை மாலை 5:05 மணி முதல் https://heb.org.sg/ எனும் இணையப் பக்கத்தில் காணலாம்.

மேல் விவாங்களுக்கு, 62234064 என்ற கோயில் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்

ஸ்ரீ மாரியம்மன் கோயில் சவுத் பிரிட்ச் ரோடு.

Related Posts