சிங்கப்பூர் செய்திகள்

கொரோனா நேரத்தில் வீட்டில் இருந்தபடியே இணையத்தின் வழியாக மாணவர்களுக்கு Class எடுப்பது எப்படி…!!! இதனை பயன்படுத்துங்கள்.

கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள நமது நாட்டில் ஊரடங்கு கடைபிடித்து வருகின்றனர் மக்கள். இந்த நேரத்தில் மாணவரக்ளுக்கு பாடம் கற்பிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர் ஆசிரியர்கள். தற்பொழுது உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்த படியே இணையத்தில் வாயிலாக மாணவர்களுக்கு எப்படி கல்வியை கற்பிக்கலாம் என்று இதில் விளக்கமாக கூறி உள்ளேன்.

கற்றல் திறனை அதிகரிக்க கொடுக்கப்படும் கூடுதல் பணியான (assignment ) எழுதல் மூலம் இல்லாமல் தகவல் தொழில்நுட்ப உலகில் பயன்படும் கருவிகளான எட்மோடோ (edmodo ), கூகிள் வகுப்பறை (google classroom ) வழியாக கொடுக்கலாம் . இதன் மூலம் கொடுக்கப்படும் பணியினை மாணவர்கள் தங்கள் இருக்கின்றன இடங்களிருந்து செய்யலாம். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்படுகின்ற பாடத்தின் பணியினை இணையதளத்தின் மூலமாகவும் கூடுதலாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் நான் மாணவர்களின் பணியினை (assignment )பார்வையிட்டு இந்த பயன்பாடுகள் மூலம் மாணவர்களுக்கு மதிப்பெண்களையும் அளிக்கின்றேன்.

மேலும் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் மாணவர்களின் பணிகள் சேமிப்பாகவே (save ) இருக்கும் . அவர்கள் எந்நேரத்திலும் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் மாணவர்கள் காகிதங்களை பயன்படுத்துதல் குறைந்து தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் அதிகமாகின்றன.

Related Posts