இந்திய செய்திகள்

தொழிலாளியின் திருமணத்திற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தந்து 5 நாள் தங்கி மணமக்களை வாழ்த்திய சிங்கப்பூர் முதலாளி!

சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் திருமணத்திற்கு அந்த நிறுவனங்களின் முதலாளிகள் சமீப காலமாக தனது தொழிலாளர்களின் திருமணத்தில் பங்கேற்க. தமிழ்நாட்டிற்கு வருகை தருவது அதிகரித்துள்ளது .

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த பிடாரிகாடு பகுதியை சேர்ந்தவர் மதியழகன்.05-06-2023 அன்று இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவரின் திருமணத்திற்கு வருகை தர வேண்டி அவர் பணிபுரியும் நிறுவனத்தின் முதலாளி மற்றும் மேலாளருக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி அவர்கள் இருவரும் மதியழகனின் திருமணத்திற்காக தமிழ்நாட்டின் அறந்தாங்கி பகுதியில் உள்ள பிடாரி காட்டிற்கு வருகை தந்தனர்.

வருகை தந்த மதியழகனின் முதலாளி மற்றும் மேலாளரின் பெயர்கள் திருமண விழா மேடையின் பின்புறத்தில் உள்ள பலகையில் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .

திருமணத்திற்கு வருகை தந்த மதியழகன் முதலாளி மற்றும் மேலாளரை குதிரை வண்டிகள் வைத்து சந்தன மாலைகள் அணிவித்தும் கிராம மக்கள் மற்றும் மதியழகன் மணமக்களின் குடும்பத்தார்கள் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Related Posts